ஆந்திரப்பிரதேசம்: 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம்!
ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தஅமித் ஷா இன்று புதுதில்லியில் ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், வழக்குத் தொடுப்பு மற்றும் தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் செயல்படுத்தல் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறை செயலாளர், ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் மூத்த அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், இந்திய அரசியலமைப்பின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் அமைந்துள்ளதாக திரு. அமித் ஷா தனது உரையில் தெரிவித்தார். புதிய குற்றவியல் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே சிவில் உரிமைகள் வலுப்படுத்தப்படாது, ஆனால் குடிமக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு கீழ் மட்டத்தில் இந்தச் சட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார். புதிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே குடிமக்கள் தங்கள் உரிமைகளைப் பெற முடியும் என்றும், இதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியம் என்றும் அமித் ஷா கூறினார்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கான நிலையை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது மாநிலத்தில் புதிய சட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கு வழி வகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவதற்கும் முறையே 60 மற்றும் 90 நாட்களுக்குள் காலக்கெடுவை வலியுறுத்துவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.