சேலம் மற்றும் கோவை நகரங்களுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தார் Dr. L.முருகன்!

Update: 2021-06-07 09:50 GMT

இந்த கொரோனா காலத்தில் பலர் மக்களுக்கு தேவையான பொருள் உதவிகள், மருத்துவ உதவிகள், உணவு வழங்குதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கொரோனா உபகரணங்களை சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் Dr. L. முருகன் அனுப்பிவைத்தார்.


கொரோனா காலத்தில் பலர் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அரிமா சங்கம் சார்பில் கொரோனா உபகரணங்களை பா.ஜ.க வின் மாநில தலைவர் எல். முருகனிடம் வழங்கப்பட்டது. அந்த உபரணங்களை இன்று சேலம் மற்றும் கோவை நகரங்களில் தவிக்கும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு அனுப்பிவைக்க பட்டது. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு பா.ஜ.க வின் ட்விட்டர் பக்கத்தில் "அரிமா சங்கம் சார்பில் கொரோனா உபகரணங்கள் மாநிலதலைவர் Dr.எல். முருகனிடம் வழங்கப்பட்டது. அவைகள் கோவை,சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பொது கே.டி. ராகவன் மற்றும் சுமதி வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்." என்று கூறி இருந்தது.

Tags:    

Similar News