இந்தியன்-2 திரைப்பட வளாகத்தில் நடந்த விபத்துக்கு கூட சட்டென்று தயாரிப்பாளர் மீது பொறுப்பை தட்டிவிட்டார். விபத்திற்கு யார் காரணம் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது வேறு விஷயம். அது போல தான், தன்னிடம் பணம் கேட்டு விடவேண்டாம் என்பதற்கு தான் இந்த மடல் என்று நாம் கடந்து போகலாம்.
ஆனாலும் மேலும் எதோ ஒன்று நெருஞ்சி முள்ளாய் இடருகிறது.
கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஞாயிறு அன்று ஒட்டுமொத்த இந்தியர்களும் பிரதமர் அழைப்பை ஏற்று ஒன்றுபட்டு நின்றதை கண்டு மனம்வெதும்பிய கம்யூனிஸ்ட்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொருமலாகவே தெளிவான தோற்றம் அளிக்கிறது.
ஞாயிறு காலை வரை மின் அழுத்தம் பற்றி மன அழுத்தம் கொண்டு வகுப்பெடுத்த உண்டியல் கட்சியினர் தங்களது அனைத்து அஸ்திரங்களும் தவிடுபொடியாகிய நிலையில் கையறுநிலையில் கமலை கொண்டு புலம்ப வைத்துள்ளனர் என்று தான் தெளிவாக புரிகிறது.
கமலும் கம்யூனிஸ்ட்களும்
கமலுக்கு கம்யூனிஸ்ட்கள் மீது வேற எந்த நடிகையை விடவும் தீரா காதல். ஆனால் அந்த உண்டியல் குலுக்கை கட்சியில் சட்டதிட்டங்கள் அதிகம், பணமும் பெயராது. தலைமை பதவியும் சட்டென்று கிடைக்காது. அதனால் தான் தனிக்கடை போட்டார். ஆனாலும் தன் அபிமான கட்சியின் அதிமேதாவித்தன செயல்பாடுகளுக்கு ஆதரவாகவே நின்றார்.
நவம்பர் மாத கடைசியில் சீனாவில் துவங்கிய Coronovirus சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் கண்ணாமூச்சி விளையாட்டால் இன்று உலகமே ஸ்தம்பித்து நிற்க காரணமாகி விட்டது. இது சீனாவே உருவாக்கிய உயிரியல் போர் என்றும் இது சீனாவே உருவாக்கிய கிருமி என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் தருந்த ஆதாரம் வெளியிடப்படாத காரணத்தால் நாம் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை எங்கனம் சீனா பயன்படுத்தி கொண்டது என்பதை தான் பார்க்க வேண்டும்.
சீன ஆக்டோபஸ்
அமெரிக்கா, ரஷ்யா என்று இரு ஜாம்பவான்கள் கோலோச்சிய உலக அரங்கில் சிலபல வருடங்களாகவே சீனா தன்னை முன்னிலை படுத்தி கொள்ள துவங்கியது
பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் கட்டுமானத்திற்கு பெருமுதலீடு செய்து அவற்றை தன் அடிமைகளாக சாசனம் செய்தது.
சமீபத்தில் ரஷ்யாவின் விளாடிவெஸ்டாக் துறைமுக கட்டுமானத்திற்கு இதே போன்று மறைமுக திட்டம் சீனா வகுக்கையில் இந்தியா முந்திகொண்டு ரஷ்யாவிற்கு உதவியது.
இந்த யுக்தியை பயன்படுத்தி இனி எவ்வளவு காலம் தான் உலக நாடுகளை கையகப்படுத்த முடியும்? ஒன்று பணத்தால் வீழ்த்த வேண்டும், இல்லை எனில் ஆயுதம் கொண்டு வீழ்த்த வேண்டும். மூன்றாவது பண்டைய கிழக்கு இந்திய கம்பெனி கொண்டு பிரிட்டிஷார் செய்த வெற்றிகரமான செயல், வியாபாரம்.
நவம்பர் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவுதலை சீன மருத்துவர்கள் கண்டுபிடித்தாலும் அதை ஜனவரி 15, 2020 வரை மூடிமறைத்த பெருமை சீன அரசையும் உலக சுகாதார நிறுவனத்தையுமே சாரும்.
ஜப்பான் அரசும், தைவானும் மனிதனால் மனிதனுக்கு பரவும் பேராபத்தை சுட்டிக்காட்டிய பின்பும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அதை தட்டி கழித்தது.
சீனாவில் இருந்து பெருவாரியான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு பரவிய பின்னர் மெல்ல WHO இதை ஒப்புகொண்டு பயணகட்டுப்பாடுகளை விதித்தது
அதற்குள் காரியம் கை மீறி சென்றது. அசட்டையாக இருந்தே பழக்கபட்ட ஐரோப்பாவும், அமெரிக்காவும் தலைக்கு மேல் வெள்ளம் வந்த பின் தான் விழித்து கொண்டனர்.
ஆனால் சீனா ஒன்றுமே நடவாதது போல இயல்பு நிலைக்கு திரும்பியதாக தோற்றம் கொடுத்தது. மரண ஓலம் உலகெங்கும் ஒலிக்கும் போது சீனா தனது வியாபாரத்தை துவங்கியது. முக கவசம், பரிசோதனை கருவிகள் என்று சுறுசுறுப்பாக ஏற்றுமதியை கொண்டு நாடுகளை விலைக்கு வாங்க துவங்கியது
சீனாவில் மரண எண்ணிக்கை ஏன் 3000த்தை கடக்கவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை.
அதே வேளையில் சீனா தனது உற்பத்தி சார்ந்த தொழில் நகரங்களை முன்கூட்டியே தனிமைப்படுத்தியது என்ற செய்திகளும் வந்தன. தெளிவான திட்டமிடல் என்றும் கூறலாம்.
சீனா இந்த பேரழிவை திட்டமிட்டு ஏற்படுத்தியது என்பதற்கு இதைவிட சான்றும் வேண்டுமோ?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக சீனாவையும் உலக சுகாதார நிறுவனத்தையும் குற்றப்படுத்தி உள்ளார். மற்ற நாடுகளும் சீனாவின் சில்லறைத்தனங்களை துகிலுரிக்க வழிமொழியும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிறுபுத்தி கொண்ட சீனா, ஆஸ்திரேலியாவில் பெரு நிறுவனங்களை கையைகப்படுத்தியது. பிரான்ஸ் அரசிடம் வெளிப்படையாக தனது 5G கருவிகளை வாங்கவில்லை எனில் மருத்துவ உபகரணங்கள் தரமாட்டோம் என்று மிரட்டியது.
நிற்க, இதற்கும் கமலுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது.
இந்த இடைவெளியில் இந்தியா என்ன செய்தது என்று அடுத்து பார்ப்போம்.
*The Story was first published in www.vaanaram.in