'நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்'- அமித்ஷா!

பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடி மூன்றாவது முறையாக நிச்சயம் பிரதமராக வரவேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2024-04-28 11:29 GMT

பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது :-

காஷ்மீருக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். காஷ்மீரில் 370 வது சட்ட பிரிவு ரத்து செய்த பிறகு ஒரு கல்வீச்சு சம்பவம் கூட நடக்கவில்லை .காங்கிரஸ் ஆட்சியில் குண்டுவெடிப்புகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 11-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார் .

பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிக்க மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஓட்டு வங்கியைப் பற்றி கவலைப்படாமல் பல்வேறு முடிவுகளை எடுத்தார். இரண்டு கட்ட தேர்தலுக்குப் பிறகு மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க நாட்டு மக்கள் முடிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். இவ்வாறு அவர் பேசினார். 


SOURCE. Kaakithapoo

Similar News