தமிழகத்திற்கு கொரோனோ பரிசோதனைக்கு மேலும் 1 1/2 கருவி சென்னை வந்தது.! #Covid19 #RTPCRtest
தமிழகத்திற்கு கொரோனோ பரிசோதனைக்கு மேலும் 1 1/2 கருவி சென்னை வந்தது.! #Covid19 #RTPCRtest
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கருவி மூலம் இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை கருவி சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது
தற்போது தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தென் கொரியா நிறுவனத்திடம் இருந்து 15 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் 1 1/2 லட்சம் உபகரணங்கள் தமிழகம் கொண்டு வரப்படுகிறது இந்தநிலையில் தென் கொரியாவில் இருந்து மேலும் 1 1/2 லட்சம் உபகரணம் நேற்று சென்னைக்கு வந்தது. நேற்றைய நிலவரப்படி 6 லட்சத்து 77 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.