கர்நாடகா அமைச்சரவையில் புதிதாக இன்று 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்!
கர்நாடகா அமைச்சரவையில் புதிதாக இன்று 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்!
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது, கர்நாடகா அமைச்சரவையில் தற்போது வரை 18 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் அவர்களுக்கு பெங்களூர் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
10 பேர் கொண்ட புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் ரமேஷ் ஜெர்கிஹோலி, சுதாகர், கோபாலய்யா, சோமசேகர், ஆனந்த சிங், நாராயணன் கவுடா,பாசவராஜ் உட்பட்டோர் இடம் பெற்றுள்ளனர், இவர்கள் அனைவரும் அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸிலிருந்து அதிருப்தி காரணமாக விலகி பாஜகவில் இணைந்து இடைத் தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.