கொரோனாவுக்கு எதிராக நாங்களும் போராடுவேம் - புதுச்சேரியில் களமிறங்கிய திருநங்கைகள்.!

கொரோனாவுக்கு எதிராக நாங்களும் போராடுவேம் - புதுச்சேரியில் களமிறங்கிய திருநங்கைகள்.!

Update: 2020-04-17 03:32 GMT

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வருகிற மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவை தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.


இருப்பினும் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றுவது இன்றும் தொடர்கிறது. மளிகை கடை, காய்கறி கடை, மற்றும் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இதனை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணியில் காவல் துறையினருடன் என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் தனியார் பாதுகாவலர்களையும் போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.



இந்த நிலையில் கிராமப்புறங்களில் இப்பணிக்காக திருநங்கைகளும் காவல் நிலையத்தில் விண்ணப்பம் பதிவு செய்தனர்.

அவர்களையும் கொரோனா தடுப்பு பணியில் போலீசார் களமிறக்கியுள்ளனர். அரியாங்குப்பம், பாகூர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் சுற்றித்திரியும் நபர்களை எச்சரித்தும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும்போது முகக்கவசம் அணியும் படியும் அறிவுறுத்துகின்றனர். நாங்களும் யாருக்கும் சலைத்தவர்கள் என கொரோனா பணியில் ஈடுபடுத்தி தங்களின் சமூக பங்கை ஆற்றி உள்ளனர் திருநங்கைகள்.

Similar News