யோகி ஆதித்யநாத் கருத்துக்களால் நேபாள நாட்டு அரசியல்வாதிகள் மிரள்வது ஏன் - அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து கூறும் காரணங்கள்.!
யோகி ஆதித்யநாத் கருத்துக்களால் நேபாள நாட்டு அரசியல்வாதிகள் மிரள்வது ஏன் - அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து கூறும் காரணங்கள்.!
இந்தியா சுதந்திரம் பெற்றபோது நேபாளம் தனி நாடு என அறிவிக்கப்பட்டாலும் அது இந்திய அரசின் பாதுகாப்புக்கு உட்பட்ட நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடைப்பட்ட நேபாள எல்லைப் பகுதிகள் தொடக்கத்தில் இருந்தே இந்திய இராணுவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் உள்ளது. நேபாளம் ஒரு நூறு சதவீத இந்து நாடு என்பதால் அதன் கலாச்சாரம் அயலார் ஊடுருவலால் குறிப்பாக சீன ஊடுருவலால் ஒரு போதும் குலையக் கூடாது என்ற நோக்கத்திலேயே அது இன்று வரை பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேபாளத்தில் சீனாவால் தூண்டிவிடப்படும் இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு அவ்வப்போது முன்மொழியப்படுகின்றன. குறிப்பாக இந்திய ராணுவப்படைகள் அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என்ற வாதம் அங்கு முன் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சீன – இந்திய எல்லைப் பகுதிகளில் குறிப்பாக கிழக்கு திபெத் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. அதே நேரத்தில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல சீனா நேபாளத்தை தூண்டியதன் பேரில் இந்திய படைகள் தற்போது நிலை கொண்டிருக்கும் லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா திபெத்- எல்லைப் பகுதிகள் தங்களுக்கு மட்டுமே உட்பட்ட பகுதி என்பதை கூறும் வகையில் புதிய வரைபடம் ஒன்றை முதலில் நேபாளத்துக்கு உட்பட்ட லிபுலேக் பிரதேச நிர்வாகம் வெளியிட்டது.
இதற்கு நேபாளமும் பச்சை கொடி காட்டியது. மேலும் இந்த பகுதியில் 80 கி.மீ. சாலை ஒன்றை இந்தியா அமைத்து திறக்கும் நிலையில் நேபாளம் ஆட்சேபனை தெரிவித்தது. மேலும் 1960 களின் முற்பகுதியில் இருந்து இந்தியா தனது ஆயுதப்படைகளை இந்த பகுதிகளில் நிறுத்தியது என்றாலும் இது இந்திய பகுதிகள் இல்லை. நேபாளத்துக்கு மட்டுமே சொந்தமான பகுதிகள் எனக் கூறி புதிய பிரச்சினையை உருவாக்கியது.
நேபாளத்தின் இந்த செயல் இந்திய நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பதால் இந்தியா தனது ஆட்சேபத்தை கூறியது.