பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்துகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் இந்த நிகழ்ச்சி வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை நடைபெற இருக்கிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதை உறுதி செய்துள்ளார். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் போலீஸார் சாலையை ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதமர் மோடி குமரி மாவட்டம் வருகை தரும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.