இனியும் சீன கம்யூனிஸ கட்சியின் செயல்பாடுகளை பொறுக்க முடியாது - தேவைப்பட்டால் அமெரிக்கா செயலில் இறங்கும் : வெளியான எச்சரிக்கை!

இனியும் சீன கம்யூனிஸ கட்சியின் செயல்பாடுகளை பொறுக்க முடியாது - தேவைப்பட்டால் அமெரிக்கா செயலில் இறங்கும் : வெளியான எச்சரிக்கை!

Update: 2020-06-20 15:08 GMT

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாக்க சீனா பல பொய்த்தகவல்களைப் பரப்பி வருகிறது.

தற்போது இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையில் சீனா ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடனும் பொருளாதார விஷயங்களில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளை மிரட்டு வரும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது அண்டை நாடுகள் மீதான சீனாவின் அராஜகப் போக்கைக் காட்டுகிறது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரும்பும் அனைவரும் சீனாவின் சர்வாதிகார கம்யூனிஸ அரசை எதிர்க்க வேண்டும்.

இனி சீன கம்யூனிஸ கட்சியின் செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தேவை ஏற்பட்டால் அமெரிக்கா செயலில் இறங்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சீனா-இந்தியா ராணுவங்கள் மோதியதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர், மற்றும் 20 இந்திய வீரர்களும் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News