நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் மற்றும் மிஷ்கினுக்கு கொரோனா பாதிப்பா? - உண்மை தகவல் என்ன.!
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் மற்றும் மிஷ்கினுக்கு கொரோனா பாதிப்பா? - உண்மை தகவல் என்ன.!
இந்த கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையை வட்டி வதைக்கிறது. தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகம். சென்னையில் கோலிவுட் பகுதியான கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகம்.
தற்போது இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா ஆகியோருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என தகவல் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா, நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமலஹாசன் போன்றோர் தங்களின் பாதுகாப்பிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். மேலும், அண்மையில் தான் நயன்தாரா 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது மறைந்த, ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிவித்தனர். அவருடைய மணைவி நடிகை எம்.என்.ராஜத்துக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.