+2 படித்துக்கொண்டே +1 தேர்வில் தோல்வியடைந்த பாடங்களை எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்!

+2 படித்துக்கொண்டே +1 தேர்வில் தோல்வியடைந்த பாடங்களை எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்!

Update: 2020-07-31 07:39 GMT

+1 வகுப்பில் வெற்றிபெறாத மாணவ - மாணவிகள் இந்த ஆண்டு +2 வகுப்புக்கு சேர்ந்து படித்துக்கொண்டே தோல்வியடைந்த பாடங்களின் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

+1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது. தற்போது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சுற்றி இருக்கும் இடங்களில் நாடாகும் பல நிகழ்ச்சியில் கலந்து கொன்டு, பின்பு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேசியுள்ளார்.

அதில், +1 தேர்வில் கடந்த ஆண்டுவுடன் இந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Similar News