இஸ்லாமிய மத கோஷங்களை சொல்ல மறுத்த 2 இந்துக்களுக்கு சரமாரி கத்திக் குத்து! வாயை மூடி கொண்ட தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள்!

இஸ்லாமிய மத கோஷங்களை சொல்ல மறுத்த 2 இந்துக்களுக்கு சரமாரி கத்திக் குத்து! வாயை மூடி கொண்ட தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள்!

Update: 2019-07-21 09:07 GMT

இஸ்லாமிய மத கோஷங்களை சொல்ல மறுத்த இரண்டு இந்து இளைஞர்கள் ஒரு முரட்டுக் கும்பலால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று சனிக்கிழமையன்று ஒரு கும்பல் சேகர் மற்றும் பசாந்த் என்கிற இந்து இளைஞர்களை கடுமையாக தாக்கியதுடன் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். முன்னதாக அந்த முரட்டுக் கும்பல் சமீபத்தில் ஒரு கும்பலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தப்ரெஸ் அன்சாரி என்பவரின் வீடியோவைக் காட்டிய பின்னர் மத கோஷங்களை எழுப்ப வேண்டி அந்த இளைஞர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் மறுப்பு தெரிவித்ததால்  சேகர் மற்றும் பசாந்த் ஆகிய இரு இந்து இளைஞர்களையும்  தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரு இளைஞர்களும் நகரின் புறநகரில் காணாமல் போன தங்கள் கால்நடைகளைத் தேடி வந்தனர். அவர்களை வழி மறித்த கும்பல் ஆரம்பத்தில் இருவரிடமும்  அவர்களின் மதம் குறித்து கேட்டது. அதன்பிறகு, அவர்கள்  தப்ரேஸ் அன்சாரியின் வீடியோக்களையும் அவர்களுக்குக் காட்டி இஸ்லாமிய மத கோஷங்களை உச்சரிக்க வேண்டிய கட்டாயப்படுத்தியுள்ளனர். 


கும்பலின் கோரிக்கைகளை எதிர்த்ததால் தாங்கள் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாக சேகர் மற்றும் பசந்த் குற்றம் சாட்டுகின்றனர்.


சேகர் மற்றும் பசந்த் மத கோஷங்களை எழுப்ப மறுத்ததால், கோபமடைந்தவர்கள் அவர்களை கத்தியால் குத்தினார்கள். பலியானவர்களில் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்டுள்ளார், மற்றவர் நான்கு ஆண்கள் குழுவினரால் கையில் குத்தப்பட்டுள்ளார்.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ராஞ்சி ஆர்கோரா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் ராஞ்சி அருகே பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


https://www.opindia.com/2019/07/two-youths-shekhar-and-basant-forced-to-chant-religious-slogans-by-a-mob-after-showing-tabrezs-video-stabbed-


Similar News