பி.எப் சந்தாதாரர்களுக்கு மேலும் 2 கூடுதல் வசதிகள்! மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.!

பி.எப் சந்தாதாரர்களுக்கு மேலும் 2 கூடுதல் வசதிகள்! மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.!

Update: 2019-11-02 09:06 GMT


மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பின் 67 வது ஆண்டு தினம்நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போதுஇ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். அதில் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என். எண்ணுக்காக தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் விண்ணபித்து பெற தேவையில்லை.


யு.ஏ.என். எண்ணை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். மற்றொன்றாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை பெற டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த இரு வசதிகளும் இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


Similar News