மகாராஷ்டிரா காவலர்களுக்கு 25 ஆயிரம் முக கவசங்களை வழங்கிய நடிகர் சோனு சூட் - குவியும் பாராட்டுக்கள்.!

மகாராஷ்டிரா காவலர்களுக்கு 25 ஆயிரம் முக கவசங்களை வழங்கிய நடிகர் சோனு சூட் - குவியும் பாராட்டுக்கள்.!

Update: 2020-07-17 07:08 GMT

நடிகர் சோனு சூட் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காவலர்களுக்கு 25 ஆயிரம் முக கவசங்களை வழங்கி உள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் ஆகியவர்களுக்கு தன்னார்வலர்கள்,நடிகர்கள்,பிரமுகர்கள் போன்றோர் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சோனு சூட் வெளிமாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை மற்றும் விமான நிலையம் ஏற்பாடு செய்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட்.

அவருடைய செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு சமயத்தில் முன்நின்று பணிபுரியும் காவல்துறையினருக்கு உதவி செய்யும் வகையில் நடிகர் சோனு சூட் 25 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கியுள்ளார்.



இதை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

Similar News