25 லட்சம் டீல்.. தேர்தலுக்காக பேரம் பேசும் காங்கிரஸ் - வெளியாவிருக்கும் ஆடியோ.!

25 லட்சம் டீல்.. தேர்தலுக்காக பேரம் பேசும் காங்கிரஸ் - வெளியாவிருக்கும் ஆடியோ.!

Update: 2018-11-22 04:54 GMT

அசதுத்தீன் ஒவைசி (Asaduddin Owaisi) ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார்.



2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹைதராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.  தற்போது தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், “இந்த தொகுதியில் நான் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசியது. இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அந்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது” என்ற திடுக்கிடும் புகாரை கூறினார். ஆனால் இந்த புகாரை அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.


Similar News