3வது முறை பிரதமராவது பெரிய சாதனை தான்.. மோடியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..

Update: 2024-06-10 13:53 GMT

ஜவஹர்லால் நேருக்கு பின்பு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார். இது அவருடைய சாதனை என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. மோடி தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்று கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தலைமைக்கு பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வருகை தந்து இருந்தார்கள். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அதில் "பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறேன். ஜவஹர்லால் நேருக்கு பின்பு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் இது அவருடைய சாதனை" என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நன்றாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News