சாத்தான்குளம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் "5 லட்சம் நிதி" அளித்த சரத்குமார்!

சாத்தான்குளம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் "5 லட்சம் நிதி" அளித்த சரத்குமார்!

Update: 2020-07-05 02:48 GMT

கடந்த வாரம் ஊரடங்கு விதிகளை மீறியதாக சாத்தான்குளத்தில் தந்தை மகனை போலீசார் சிலர் அடித்து கொன்றதாக அதிர்வலைகள் எழுந்தது, இதில் சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சிதலைவர் ஆர்.சரத்குமார் இன்று சாத்தான்குளம் சென்றார். மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்கு சென்று அவர்களின் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கினார். சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் சென்றனர்.

Similar News