#9PM9Minute மெழுகுவர்த்தி ஏற்றிய தலைவர் ரஜினிகாந்த்

#9PM9Minute மெழுகுவர்த்தி ஏற்றிய தலைவர் ரஜினிகாந்த்

Update: 2020-04-05 16:08 GMT

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, நாடெங்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களில் தீபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் தீபம் ஏற்றினர். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது போயஸ் கார்டன் இல்லத்தின் வாசலில் நின்று மெழுகுவர்த்தி ஏற்றினார். 

இந்த கடினமான காலகட்டத்தில் ஒற்றுமையாகவும் மனித நேயத்துடனும் இருக்கவும், மக்களுக்காக உழைப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது அமைந்துள்ளது. இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களில் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றினர். 

Similar News