மதுரை வந்த அமித்ஷாவுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சு

மதுரை வந்த அமித்ஷாவுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சு

Update: 2019-02-22 08:53 GMT

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 


வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


எனவே, பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள் எவை என்பது குறித்து இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் ஆலோசித்தனர் என கூறப்படுகிறது. 


அதேபோல், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இந்த விவகாரம் குறித்தும் அமித்ஷாவுடன் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து இருக்கக்கூடும்  எனவும் கூறப்படுகிறது. என்றாலும் பேச்சு வார்த்தை விவரம் எதுவும் வெளிவரவில்லை.


Similar News