களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா, கொரோனா பாதிக்கப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிப்பு.!

களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா, கொரோனா பாதிக்கப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிப்பு.!

Update: 2020-04-15 03:50 GMT

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 350 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பகுதிகளும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலருக்கும் அச்சம் எழுந்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வசிக்கும் பகுதிகளில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் தூய்மைப் பணியாளர்கள் அச்சம் காரணமாக அப்பகுதிக்கு சென்று கிருமி நாசினி தெளிக்க தயக்கம் காட்டினர்.

இதை அறிந்த நடிகையும் அப்பகுதி எம்எல்ஏவுமான ரோஜா பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனே சென்று பாதுகாப்பு உடைகள் அணிந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மேற்கொண்டார், பின்னர் தூய்மை பணியாளர்களும் கிருமிநாசினி தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ரோஜாவின் இத்தகைய செயல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Similar News