நான் தோனியின் தீவிர ரசிகன் - புகழ்ந்த தள்ளிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ்!

நான் தோனியின் தீவிர ரசிகன் - புகழ்ந்த தள்ளிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ்!

Update: 2020-08-05 12:52 GMT

ஐபிஎல் போட்டியில் எம் எஸ் டோனி களம் இறங்கி விளையாடுவதை பார்ப்பதற்கு மிக ஆவலாக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்பு எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எம்எஸ் டோனி விளையாட வில்லை. அதனால் அவருடைய ரசிகர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதுதான் ஐபிஎல் போட்டியை செப்டம்பர் 26-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு அதிக பூர்வமாக அறிவிப்பை பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு அவர்களுடைய பயிற்சிகளை தொடங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்வார்கள் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டி எம்எஸ் டோனிக்கு மிக முக்கியமான எதிர்காலத்தைப் பற்றி கணிக்கக்கூடியது.


இந்நிலையில் எம்எஸ் டோனி ஐபிஎல் போட்டியில் களமிறங்கி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். டீன் ஜோன்ஸ் எம்எஸ் டோனி பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேசியுள்ளார். அதில் நான் எம்எஸ் டோனியின் தீவிரமான ரசிகன். இந்தியாவின் சிறந்த ஆறு கிரிக்கெட் வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் எப்போதுமே எம்எஸ் டோனி இருப்பார்.

இந்த ஐபிஎல் போட்டியில் எம்எஸ் டோனி சிறப்பாக விளையாடி விட்டால் உலக கோப்பையை பார்த்து கொள்வர். மேலும், எம்எஸ் டோனி ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். எந்த சமயத்தில் ரசிகர்களை ஆர்வத்துடன் வைத்திருப்பார். டோனி ஒரு சிறந்த வீரர்.

இவ்வாறு டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.  

Similar News