அயோத்தி வழக்கு இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அயோத்தி வழக்கு இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Update: 2019-11-09 10:15 GMT


அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என்றும், இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும் என்றும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு. இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும். மக்கள் இந்தத் தீர்ப்பை சமநிலையுடன், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேண வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 


Similar News