இதெல்லாம் basic மேனர்ஸ் மக்களே !! எழுதப்படாத சமூக விதிகள்!
இதெல்லாம் basic மேனர்ஸ் மக்களே !! எழுதப்படாத சமூக விதிகள்!
முடிந்தால்
அனைத்தையும் கடைபிடிக்கலாம்.. அனைவரும் கடைபிடிக்கலாம்.
1. ஒருவர் அழைப்பினை ஏற்கவில்லையெனில், இரு முறைக்கு மேல் தொடர்ந்து அழைக்க வேண்டாம். அவர்களுக்கு அதைவிடவும் ஏதேனும் முக்கிய அலுவல் இருக்கும் என்பதை புரிந்து கொள்க.
2. யாரேனும், தவறுதலாக தரையில் எதையாவது கொட்டி விட்டால், புதிய உணவு வகையையோ அல்லது ஸ்பூன், கத்தி. ஃபொர்க் மற்றும் இதர உணவு உண்ணும் பொருட்களையோ எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் தடுமாறினால்
அவர்களையே வெறித்து பார்க்காதீர்கள். தவறுதலாக தும்மல், இருமல், எதிர்பாராத வாயு போன்ற விபத்துகரமான சில தருணங்களை எளிமையாக வெறித்து பார்க்காமல் எளிமையாக கடந்து செல்லுங்கள்.
3. பயன்பாட்டில் இருக்கும் கழிவறைக்கு பக்கத்தில் இருக்கும் அறையை பயன்படுத்துவதை தவிறுங்கங்கள். அது பயன்படுத்தி கொண்டிருப்பவருக்கும், உங்களுக்கும் அசெளகரியமான சூழலை உருவாக்கும்.
4. கடன் கொடுத்தவருக்கு, தான் கொடுத்தது நினைவு வரும் முன்பே திரும்ப கொடுத்துவிடுங்கள். அது ரூ. 1 ஆக இருந்தாலும் சரி
ரூ. 100 ஆக இருந்தாலும் சரி.
அது உங்கள் குணத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் செயல் என்பதை உணருங்கள். குடை, பேனா, போன்ற இதர பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
5. ஒருவர் உங்களை விருந்துக்கு உணவு விடுதிக்கு அழைத்து சென்றால், பட்டியலில் இருக்கும் விலை உயர்ந்த உணவை தேர்வு செய்வதை தவிருங்கள். மேலும் சூழலை எளிமையானதாக்க, அவரையே உணவை தேர்வு செய்ய சொல்லி பரிந்துரைக்கலாம்.
6. மிக விநோதமான கேள்விகளை தவிறுங்கள், “ஓ
உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? “ அல்லது “இன்னும்
சொந்த வீடு இல்லையா “ . இவையெல்லாம்
எந்த வகையிலும் உங்கள் பிரச்சனை அல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.