கர்நாடகாவில் சிக்கல் இல்லாத ஆட்சியை விரும்பும் பாஜக மேலிடம் !! ஜனாதிபதி ஆட்சி அமையவும் வாய்ப்பு என தகவல்!!

கர்நாடகாவில் சிக்கல் இல்லாத ஆட்சியை விரும்பும் பாஜக மேலிடம் !! ஜனாதிபதி ஆட்சி அமையவும் வாய்ப்பு என தகவல்!!

Update: 2019-07-25 06:46 GMT


கர்நாடகாவில் பாஜக உடனடியாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி மேலிடம் பொறுமை காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.


இதையடுத்து, முதல்வராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், ஆட்சி கவிழ்ந்தது.


கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பாஜக கவிழ்த்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான 105 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உடனடியாக உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்து உடனடியாக அவர் ஆளுநரைச் சந்திப்பார் என கூறப்பட்டது.


ஆனால் அவரை அவசரப்பட வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னமும் முடிவெடுக்கவில்லை.


224 எம்எல்ஏக்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக இருந்தது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், 2 சுயேச்சைகளும் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் அந்தக் கூட்டணியின் பலம் 100-ஆகக் குறைந்தது.


பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. அதே வேளை 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.


16 எம்எல்ஏக்கள் தகுதியிழந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்களின் ஆதரவு போதுமானது. ஆனால் அவர்களை தகுதியிழந்ததாக சபாநாயகர் அறிவிக்கவில்லை. புதிய அரசு அமைந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என பாஜக தலைமை எண்ணுகிறது. அதற்காக சட்ட ஆலோசகர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளது.


இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களை டெல்லி வருமாறு கட்சித் தலைமை அழைத்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டார், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவளி உட்பட மூத்த பாஜக தலைவர்கள் இன்று டெல்லி சென்றுள்ளனர். பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர்.


இதனிடையே கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் வஜூபாய் வாலா பரிந்துரைக்கக்க கூடும் என பாஜக செய்தித்தொடர்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தி் எமஎல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு தெரிந்த பிறகு அடுத்தகட்ட நகர்வு இருக்கும் எனத் தெரிகிறது.  


Similar News