#BREAKING: செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-06-28 09:14 GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் மிக வேகமாக பரவி வருகிறது இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பு ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர் டி அரசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Similar News