#BREAKING: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கொரோனா தொற்றால் பாதிப்பு.!
#BREAKING: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கொரோனா தொற்றால் பாதிப்பு.!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரரும் தேனி ஆவின் பால் நிறுவனத்தின் தலைவருமான ஓ ராஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் அவரை மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் அவருடைய கார் ஓட்டுனர் மூலமாக பரவியுள்ளது என கூறப்படுகிறது.
தற்போது ஓ.ராஜா நலமாக உள்ளதாகவும் மற்றும் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.