2019 இடைக்கால பட்ஜெட்டுக்கு அருண் ஜெட்லி புகழாரம் - பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள்! #Budget2019
2019 இடைக்கால பட்ஜெட்டுக்கு அருண் ஜெட்லி புகழாரம் - பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள்! #Budget2019
இன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கு அமெரிக்காவுக்கு சென்றுள்ள மத்திய மூத்த அமைச்சர் அருண்ஜெட்லி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
2019 -2020-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
5 ஏக்கருக்கு உட்பட்ட சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000 வழங்க உள்ளதாக அறிவித்தார். ₹6,000 உதவி திட்டம் மூலம் ₹12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் என்றும், சிறிய விவசாயிகளுக்கு உதவ ₹75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹2.5 லட்த்தில் இருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சிறப்பான, தரமான பட்ஜெட் - அருண் ஜெட்லி புகழாரம்
பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ளது சிறப்பான, தரமான பட்ஜெட் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலேயே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா
விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விவசாயிகள் மேலும் கடன் வாங்காத அளவுக்கு ஆண்டு உதவித்தொகை திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.
2019 -2020-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
5 ஏக்கருக்கு உட்பட்ட சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000 வழங்க உள்ளதாக அறிவித்தார். ₹6,000 உதவி திட்டம் மூலம் ₹12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் என்றும், சிறிய விவசாயிகளுக்கு உதவ ₹75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹2.5 லட்த்தில் இருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சிறப்பான, தரமான பட்ஜெட் - அருண் ஜெட்லி புகழாரம்
பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ளது சிறப்பான, தரமான பட்ஜெட் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலேயே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா
விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விவசாயிகள் மேலும் கடன் வாங்காத அளவுக்கு ஆண்டு உதவித்தொகை திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.