2022-ஆம் ஆண்டுக்குள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்! - மோடி அரசு அறிவிப்பு!
2022-ஆம் ஆண்டுக்குள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்! - மோடி அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக 1264 கோடி ரூபாய் திட்டம் வகுக்கப்பட்டது. 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேலை தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார்.
இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது. இதனுடன் 100 எம்பிபிஎஸ் மாணவர்களும், 60 நர்ஸ்களும் பயிற்சிபெறும் வகையில் மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.