தமிழகத்துக்கு தடுப்பு மையங்கள், ஆய்வகங்கள், உபகரணங்கள் செலவுக்காக ரூ.510 கோடி: மத்திய அரசு ஒதுக்கியது..
தமிழகத்துக்கு தடுப்பு மையங்கள், ஆய்வகங்கள், உபகரணங்கள் செலவுக்காக ரூ.510 கோடி: மத்திய அரசு ஒதுக்கியது..
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக நோய் தடுப்பு மையங்கள் உருவாக்குவது, கூடுதலாக ஆய்வகங்கள் அமைத்தல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் போன்ற செலவினங்களுக்காக பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு ரூ.510 கோடி அவசரமாக ஒதுக்கியுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 11 ஆயிரத்து 92 கோடிகள் ஒதுக்கியுள்ளதாகவும், பேரிடர் அபாய தடுப்பு மேலாண்மை நிதியின் கீழ் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.