திருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம்! தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி!!
திருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம்! தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி!!
திருமலையில் உள்ள மாநில சாலை போக்குவரத்துக் கழகப் பேருந்து டிக்கெட்டுகளில் கிறிஸ்தவ மத பிரச்சார தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளதை பார்த்து இந்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருமலையிலிருந்து திருப்பதி செல்ல திருமலையில் ராம்பகிஜா அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் எலக்ட்ரானிக் டிக்கெட்டுகளின் பின்புறம் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமலையில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பேருந்து டிக்கெட்டுகளின் பின்புறம் கிறிஸ்தவ மத பிரச்சாரம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதாவது “ஜெருசலேம் புனித யாத்திரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலையில் மாற்று மத பிரச்சாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் கிறிஸ்தவ மத சின்னங்களை நேரடியாகவோ மறை முகமாகவோ பயன்படுத்துவது முற்றிலும் தவறு.
இதனால், திருமலை போக்குவரத்துக் கழக பேருந்து டிக்கெட்டுகளில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடைபெறுவதை கண்டு இந்துக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்துக்கள் புனித யாத்திரை குறித்த தகவல்கள் இடம் பெற்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கிறிஸ்தவ மத பிரச்சார விளம்பரங்கள் இருப்பதைக் கண்டு கொதித்துப்போள் உள்ளனர்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுனில் தியோத்தார், “திருமலை பேருந்து பணச்சீட்டில், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் யாத்திரை என்று கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. இது தேவையில்லாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது, மதவெறியை தூண்டுவது. அனைத்துக்கும் மேலாக ஏழுமலையானை அவமதிப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.