கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜ் டிவி கேமரமன் வேல்முருகன் உயிரிழந்தார்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜ் டிவி கேமரமன் வேல்முருகன் உயிரிழந்தார்.!

Update: 2020-06-27 07:31 GMT

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இன்று சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியான ராஜ் டிவியில் முத்த ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்தவர் வேல்முருகன். இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்களாக அவருடைய உடல்நிலை மிக மோசமானதால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.



இதற்கு துணை முதலவர் ஓ. பன்னிர் செல்வம் அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், வேல்முருகனின் மறைவுக்கு பத்திரிகையாளர் சங்கம், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.    

Similar News