பாலிவுட்டில் நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முன்னுரிமை - சோனு சூட் ஆவேசம்.!

பாலிவுட்டில் நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முன்னுரிமை - சோனு சூட் ஆவேசம்.!

Update: 2020-07-26 09:03 GMT

 நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

மேலும் பாலிவுட்டில் அப்படி என்னதான் நடக்கிறது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

. இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள தில் பேச்சாரா படம் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் சுஷாந்த் இறக்க பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியலே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ள பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் 'பாலிவுட்டில் நடிக்க வரும் புதியவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் இவர் "உங்கள் நரம்புகள் எஃகு" போல வலுவாக இருந்தால் உள்ளே வாருங்கள். மற்றபடி அதிசயங்கள் நடக்கும் என கனவு காண வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கு கட்டான உடல் இருப்பதால் மட்டும் வாய்ப்பு கிடைத்து விடாது. அந்த வாய்ப்பை ஒரு முன்னாள் நடிகர் ஒரு போன் கால் போட்டு தனது மகனுக்கு வாங்கி கொடுத்துவிட முடியும். ஏனென்றால் இங்கு நட்சத்திரங்களின் வாரிசுகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும்' என கூறியுள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News