அசுரன் படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.!
அசுரன் படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.!
தமிழ் திரையுலகத்தில், வெற்றிமாறன் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை இயக்கியபவர்.தொடர்ந்து ஆடுகளம் படத்தை இயக்கினார். ஆடுகளம் படம் தேசிய விருது பெற்றது. இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதற்கான போஸ்டர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இதேபோல் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்ளில் நடிக்கிறார் என்பது மேலும் ஒரு பாலிவுட் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.