மக்களுக்கு நல்லது செய்கிறீர்கள்; சித்த மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.!

மக்களுக்கு நல்லது செய்கிறீர்கள்; சித்த மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.!

Update: 2020-07-06 05:28 GMT

சித்த மருத்துவர் வீரபாபுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு நல்லது நல்லது செய்கிறீர்கள் என பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அலோபதி, சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை கொடுப்பதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை கொடுக்க மாநகராட்சி சிறப்பு மையத்தை உருவாக்கி உள்ளது. அந்த மையத்துக்கு சித்த மருத்துவர் வீரபாபு மற்றும் அவருடைய குழுவினர், ஆவிபிடித்தல், சூரியக்குளியல், மூலிகை தேநீர், சித்தா உணவுகளை கொண்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றனர். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சித்த வைத்தியம் மூலம் இதுவரை 550 பேர் கொரோனாவில் இருந்த குணமாகி உள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மாலை சித்த மருத்துவர் வீரபாபுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அதில் உங்களுடைய சேவையை பற்றிய செய்தியை தொடர்ந்து பார்த்து படித்து வருகிறேன். இந்த கொரோனா சமயத்தில் மக்களுக்கு நல்லது செய்கிறீர்கள். உங்களுடைய செயல்பாட்டை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாவும் மற்றும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஊரடங்கு உத்தரவும் முடிந்த பிறகு நாம் சந்திப்போம் என்று பேசி, பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதனைப் பற்றி மருத்துவர் வீரபாபு கூறியது: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் என்னை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வேலை தொடரும் என தெரிவித்துள்ளார்.  

Similar News