நடிகர் அர்ஜுன் மகளுக்கு கொரோனா!

நடிகர் அர்ஜுன் மகளுக்கு கொரோனா!

Update: 2020-07-20 14:27 GMT


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என இதனை இன்ஸ்டாகிராமில்

உறுதி செய்துள்ளார்.

இவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அந்த பதிவில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். விரைவில் குணமடைந்து உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்" என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைவார் என தெரிவித்து வருகின்றனர்.

Similar News