கோவில்களுக்கு கோபுரம் ஏன்? கும்பாபிஷேகம் எதற்காக? மறைந்திருக்கும் ஆச்சர்யம்
கோவில்களுக்கு கோபுரம் ஏன்? கும்பாபிஷேகம் எதற்காக? மறைந்திருக்கும் ஆச்சர்யம்
கோபுர தரிசனம் புண்ணியம் மட்டுமல்ல பல ரகசியத்தையும் கொண்டது?
நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மட்டுமே அனைத்தும் வழிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டது கல், மண், மரம், துவங்கி அனைத்திலும் இருக்கும் ஆன்மீக அம்சத்தை கண்டுணர்ந்தவர் நாம். இதற்கு காரணம் இயற்கையே தெய்வம், என்கிற ஆழமான நம்பிக்கை. விவசாயி மண்ணையும், ஆயுத பூஜையின் போது நமக்கு தொழிலாதாரமாக விளங்குகிற பொருட்களையும் என நாம் வழிபடும் முறையும், பண்பும் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
இயற்கையை அடுத்து வழிபாட்டிற்கு ஏதுவாகவும் நம் இலக்கிய, கலாச்சார குறியீடுகள் மற்றும் கதைகள் சார்ந்தும் உருவ வழிபாட்ட்டையும் போற்றி வளர்த்தவர் நாம். அந்த வகையில் குல தெய்வ வழிபாடு என்பது உறவுகள், ஒரு சில குடும்பம் கூடி வழிபடுகிற இடமாகவும், ஒரு குறிப்பிட்ட மக்களை சென்றடைகிற முறையாகவும் இருந்தது. ஆனால் கோயில்கள் என்பது கடவுளை இந்த பிரபஞ்சத்தின் அரசனாக கொண்டாடும் ஒரு இடம் என்பதாலேயே அதற்கு பெரும் கோபுரங்கள், மணி மண்டபங்கள் என அரண்மனையில் வாழும் அரசரை விடவும் பிரம்மாண்டமான கட்டிடங்களை உருவாக்க விளைந்தனர் நம் பண்டைய மன்னர்கள்.
வழிபாட்டு தலங்கள் எல்லா கலாச்சார பின்னனி கொண்டவராலும் கட்டப்படும் என்றாலும், தமிழர்களின் அறிவும், விஞ்ஞானமும் உலகத்தரத்தில் அமைந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், தலைமுறைகள் தாண்டியும் நிற்க க்கூடியதாக இருப்பதே நம்மை சர்வதேச அரங்கில் தனித்து காட்டும் அம்சம்.
நம் கோவில்களில் இருக்கும் கலையம்சமும், பிரமாண்டமும், கம்பீரமும் நம் முன்னோர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. கோபுரங்கள் உயரமானதாக கட்டப்பட மிக முக்கிய காரணம் அன்றிருந்த மன்னர்களின், நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை தான்.