வனிதா வசிக்கும் அப்பார்ட்மெண்டில் இருந்து புகார் - காவல்துறையினர் வனிதா மீது வழக்கு பதிவு.!
வனிதா வசிக்கும் அப்பார்ட்மெண்டில் இருந்து புகார் - காவல்துறையினர் வனிதா மீது வழக்கு பதிவு.!
வனிதா அவர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதால் அவர் மீது புகார் தெரிவித்திருக்கிறது. நடிகை வனிதா கடந்த ஜூன் 27 ஆம் தேதி மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறையில் மணந்தார். கொரோனா. ஊரடங்கு காரணமாக இவர் தன் வசிக்கும் வீட்டிலேயே சிம்பிளாக திருமணத்தை முடித்துக் கொண்டார். திருமணத்தில் முக்கிய அவருடைய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இவர் திருமணத்தை பற்றி பலரும் பலவிதமாக பேசத் தொடங்கினர்.பீட்டர் பால் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டது அறிந்து அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பிட்டர் பாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் யூடியூப் பிரபலம் சூர்யா தேவி வனிதா திருமணம் குறித்து பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தனர். மேலும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, நாஞ்சில் விஜயன், இயக்குனர் சுரேந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும் வீடியோ பதிவிட்டு வெளியிட்டு வந்தனர்.
இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வனிதா தன் யூடியூப் சேனல் மூலம் பதில் அளித்து வந்தார். இன்றுவரையும் இந்த பிரச்சனை முடிவதாக தெரியவில்லை. இவர்கள் இவ்வாறு அவதூறாக பேசுவது அறிந்த சூர்யா தேவி மற்றும் சுரேந்திரன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனை அடுத்து சூரியா தேவியும் வனிதாவின் மீது புகார் அளித்திருந்தார். இருவரும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தற்பொழுது வனிதா குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியதால் அவர் மேல் அடுக்குமாடி குடியிருப்பின் பொதுச்செயலாளர் நிஷா தோட்டா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போரூர் போலீசார் வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.