கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம்.!

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம்.!

Update: 2020-07-18 06:51 GMT

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்கு டிடிவி தினகரன் இன்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அரங்கேறிவரும் சம்பவங்கள் அருவெறுக்கத்தக்கவையாக அமைந்திருக்கின்றன. பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக கந்தசஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியதுவன்மையான கண்டனத்திற்குரியது;எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

எந்த மதத்தை அல்லது பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதத்தையோ, மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கைகளையோ தரக்குறைவாக பேசுவதற்கு உரிமை இல்லை. தலைவர்களை இழிவுபடுத்தியும், மத உணர்வுகளைத் தூண்டியும், அவற்றின் வழியாக அரசியல் லாபம் பார்க்க யார் நினைத்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை.

மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது, தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் 






 


 


Similar News