தமிழ் சினிமாவிலும் குரூப்பிசமா? - பிரபல நடிகரின் டீவீட்டால் வெடித்த சர்ச்சை.!

தமிழ் சினிமாவிலும் குரூப்பிசமா? - பிரபல நடிகரின் டீவீட்டால் வெடித்த சர்ச்சை.!

Update: 2020-07-28 11:16 GMT

தமிழ்சினிமாவில் பல படங்களில் துணை நடிகராகவும் ஹீரோவாகவும் வலம் வந்தவர் நட்டி நட்ராஜ். இவர் நடித்த சதுரங்க வேட்டை படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கண்டது. இந்த படத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் மேலும் பாலிவுட்டில் லவ் ஆஜ் கல், பிளாக் பிரைடே ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார். தற்போது டுவிட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டிருக்கிறார் அந்த பதிவு இப்போது பரபரப்பாகிருக்கிறது.

பாலிவுட்டில் இதுபோல மறைந்த சுஷாந்த் சிங்கின் மரணத்திற்குப் பிறகு அந்த அங்கு பல குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணமே இருந்தன மேலும் பலருக்கும் பல சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது அப்படி என்னதான் பாலிவுட்டில் நடக்கிறது என்று. மேலும் இவரது மரணத்திற்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

அதனையடுத்து ஏஆர் ரகுமான் கூட அங்கு தன்னை பணியாற்ற விடக்கூடாது என்ற பல சதி செய்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலை பாலிவுட்டில் மட்டும்தான் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் நட்டி நட்ராஜ் ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவு ஒன்று தமிழ் சினிமாவுக்குமா என்று அனைவரையும் யோசிக்க வைக்கிறது. அவர் ட்விட்டரில் போட்ட பதிவில் இருப்பதாவது தமிழ் சினிமாவில் எப்போதும் நெபோட்டிசம் இல்லை ஆனால்

குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????.. இவர் பதிவிட்டிருந்தார்.

தற்போது இவர் விடுத்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

Similar News