அப்பன் முருகனைப் பழிக்கும் இந்து துவேஷ கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? - பகீர் தகவல்கள்.!
அப்பன் முருகனைப் பழிக்கும் இந்து துவேஷ கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? - பகீர் தகவல்கள்.!
திமுகவின் தாய் இயக்கமான திராவிடர் கழகம், அதன் கிளை இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் வகை வகையாக யூட்யூப் சேனல் தொடங்கி, மதச்சார்பற்று இந்து மதத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறோம் என்ற பெயரில் இந்து மதத்தையும் மத நம்பிக்கைகளையும் இழிவு படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தமிழர்களின் வாழ்வில் ஒன்றிப் போன கந்தர்சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி அண்மையில் கருப்பர் கூட்டம் என்ற சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்துக் கடவுள்களையும் இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள இந்த சேனலில் ஆபாச புராணம் என்று பெயர் வைத்து சரஸ்வதி, பிரம்மா, முருகன் போன்ற கடவுளர்களைப் பற்றி தகாத வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசியதோடு இப்படித் தான் புராணத்தில் எழுதியிருக்கிறது, அதனால் தான் இந்தப் பெயர் என்று நியாயப்படுத்த வேறு செய்கின்றனர்.
இந்த கருப்பர் கூட்டத்தின் அங்கமான சுரேந்தர் நடராஜன் என்பவன் சரஸ்வதி புராணம் என்று தலைப்பிட்டு 'சரஸ்வதி பிரம்மாவோட நாக்கில் உக்காந்திருப்பதாக சொல்கிறீர்களே சிறுநீர் வந்தால் எங்கே கழிப்பாள்? வயிறு சரியில்லை என்றால் எங்கே போவாள்? என்று கேட்டால் பதிலில்லை. அவள் நாக்கில் இருக்கிறாள் என்று சொல்லும் நீங்கள் பிரம்மாவின் வாயில் கழிவறை கட்டி விட்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டாமா?' என்று மிகவும் கீழ்த்தரமாக பகுத்தறிவு என்ற பெயரில் நம்பிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் பேசி இருக்கிறான்.
மற்றொரு வீடியோவில் ஈவெ ராமசாமி நாயக்கரின் உருவப்படம் பொறித்த சட்டையை அணிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரும் நாரதரும் சந்தித்ததைப் பற்றி ஆபாசமாக நாரதர் போகும் வீட்டில் எல்லாம் கிருஷ்ணர் அவ்வீட்டுப் பெண்களுடன் சமாச்சாரம் செய்து கொண்டிருந்தார் என்றும் இறுதியில் நாரதர் கிருஷ்ணருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும் நாக்கூசாமல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளான்.
மரியாதா புருஷோத்தமர் ராமரையும், பிராட்டி சீதையையும் நட்புக்கும் பக்திக்கும் இலக்கணமான அனுமனையும் இவர்களைப் பற்றி காவியம் படைத்த கம்பரையும் கூட விட்டு வைக்கவில்லை இந்த கழிசடைப் பிறவி.