விபூதி வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொன்னாராம் ஏ.ஆர்.ரகுமானின் தாய் - வைரலாகும் சர்ச்சை.!

விபூதி வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொன்னாராம் ஏ.ஆர்.ரகுமானின் தாய் - வைரலாகும் சர்ச்சை.!

Update: 2020-08-01 03:03 GMT

திரையுலகில் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர். ரகுமான் இவர் எப்பொழுதும் திரையுலகில் தன்னைப் பற்றி எந்த ஒரு சர்ச்சையும் இருக்க கூடாது என்று நினைப்பவர். அதற்கு மாறாக தொடர்ந்து இவரது சர்ச்சைகள் வந்த மையமாக உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக பாலிவுட்டில் இவருக்கு வரும் படங்களை யாரோ தடுக்கின்றனர் என இவர் கூறியிருந்தார். இது சில நாட்களுக்கு முன்பு பரபரப்பானது.

அதனையடுத்து தற்பொழுது பாடலாசிரியர் பிறைசூடன் அளித்த நேர்காணலில் ரகுமான் பற்றிய சர்ச்சையான தகவல் வெளிவந்தது. இவர் ஏ.ஆர்.ரகுமான் இடம் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசி இருந்தார் அதில் ரகுமானிடம் பணிபுரிய அவர் வீட்டிற்கு சென்றபோது ரகுமானின் தாயார் இங்கு விபூதி,குங்குமம் ஆகியவை வைக்கக்கூடாது

என்றும், நீங்கள் வீட்டிற்குள் நுழையும் முன்பு உங்கள் நெற்றியில் உள்ள விபூதி குங்குமம் ஆகியவற்றை நீக்கிவிட்டு வருமாறு கேட்டுக் கொண்டாராம். அதை வைத்து ஏ.ஆர்.ரகுமான் ஒரு மதவேஷம் கொண்டவர் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பலரும் ஏ.ஆர்.ரகுமான் இப்படிப்பட்ட மதவேஷம் கொண்ட மனிதரல்ல எனவும் இவர் எல்லா மதமும் சம்மதம் என்று நோக்கத்துடன் இருக்கிறார் என்று பலர் இவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்..

Similar News