அயோத்தியில் ராமர் கோயிலுக்காக வாதாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் பராசரன்.!
அயோத்தியில் ராமர் கோயிலுக்காக வாதாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் பராசரன்.!
ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களுக்குத் துணையாக சட்ட வழியில் போராடிய 92 வயது K பராசரன், பூமி பூஜையைத் தனது இல்லத்தில் கண்டுகளித்தார். இவர் வழக்கறிஞரும், இந்து தரப்பினருக்கும் தலைமை ஆலோசகராக பணியாற்றினார்.
Look at K Parasaran who fought the aggressive liberal, left and congress lawyers with smile and compassion in the Supreme Court sitting at home and seeing the Bhumi puja in Ayodhya. We should bow our heads to their nonagenarian legal genius who got us the Ram Janmasthaan pic.twitter.com/Pi2DGz8TX0
— S Gurumurthy (@sgurumurthy) August 5, 2020
K பராசரன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், 1983 முதல் 1989 வரை அட்டனி ஜெனெரலாகவும், 1976இல் தமிழ்நாட்டின் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.2003 மற்றும் 2011இல் பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதை பெற்றவர். 2012இல் ஜனாதிபதியால் ஆறு வருடம் ராஜ்ய சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சட்டமைப்பு மற்றும் பண்டைய வரலாறு குறித்த அவரது கருத்துக்கள் மூத்த வழக்கறிஞர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் வழக்கில் கோவிலின் நிருவகத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் அதில் பிரிவு 25(2)(பி) கீழ், பெண்கள் பாதுகாக்கப்படுவதில்லை, இது சாதிப் பிரிவினையே ஆகும். கோவிலை மற்றப்பிரிவினர்களுக்கு திறக்க மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளது, இதில் பெண்களை உட்படுத்தக்கூடாது என்று வாதாடினார்.
ராமர் கோவில்- பாபர் மசூதி உச்சநீதிமன்ற வழக்கில் இவர் இந்துக்களுக்கு ஆதரவாக வாதாடினார். விசாரணையில் ஒவ்வொரு நாளும் அவரது பணியை அர்ப்பணித்து அறியமுடிகிறது.