வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கும் தர்மபுரி பா.ம.க. வினர்.!

வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கும் தர்மபுரி பா.ம.க. வினர்.!

Update: 2020-04-18 07:27 GMT

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி நேரடியாக களத்திற்கு சென்று கண்காணித்து வருகின்றார்.

இந்நிலையில், தர்மபுரி பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சக்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை அரசு கையாண்டு வருகிறது.

நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட இண்டூர், தளவாய்அள்ளி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்பட்டி, தளவாய்அள்ளி, நேருநகர் உள்ளிட்ட பகுதிகளில் கபசுர குடிநீரை பாமக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 

Similar News