கொரோனா குறித்து அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி ஆலோசனை.!
கொரோனா குறித்து அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி ஆலோசனை.!
பிரதமர் நரேந்திரமோடி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பாமக இளைஞர் அணித்தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (5ம் தேதி) தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார்.
அப்போது கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்த சிக்கலான நேரத்தில் தலைமை பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்தேன்.
கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வரைக்கும் ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.
இது தொடர்பான கூடுதல் ஆலோசனைகளை எழுத்து வடிவில் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
விரைவில் எழுத்து வடிவில் கொடுக்கப்படும். மேலும், உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றினைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.