விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?
விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?
விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?
கடலூர் மாவட்ட ஊடக துறையினரின் செயலால் தொடரும் சமூக அவலங்கள்
உண்மையை வெளிகொனற மறுக்கும் ஊடகங்களால் மக்களுக்கும் நன்மை பயக்காது? ஊடகத்துறைக்கும் நன்மை பயக்காது? தவறை சுட்டி காட்ட வேண்டியது ஊடகத்தின் கடமை என்பதை உணரவேண்டும்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது தற்போதைய அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் சாமானியனுக்கு நன்மை பயக்குமா?என்றால் இல்லவே இல்லை என்கிறது சமூகம்
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாயகிருஷ்ணன் (50), எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (26). நண்பர்களான இவர்கள் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிக்க வழியில்லாமல் தவியாய் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களாக பல இடங்களில் இந்த நண்பர் கூட்டம் எங்காவது மது கிடைக்குமா? என்று கேட்டு அலைந்து திரிந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நண்பர் குழுவை சேர்ந்த குமரேசன் தன் சக நண்பர்களின் அவசர தேவையை பூர்த்தி செய்ய விரும்பி தான் வேலை செய்து வந்த டாக்ரோஸ் ரசாயன தொழிற்சாலையிலிருந்து ஒரு லிட்டர் மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அதை தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைக்காக குடித்துள்ளார்
சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அதனை அடுத்து வலி அவரின் குடும்பத்தினர், சந்திரகாசியை சிகிச்சைக்காக