கோதாவரி - கிருஷ்ணா - காவேரி நதிகள் இணைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! கண்டிக்க திராணியற்ற ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கோஷ்டிகள்!!
கோதாவரி - கிருஷ்ணா - காவேரி நதிகள் இணைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! கண்டிக்க திராணியற்ற ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கோஷ்டிகள்!!
“தமிழகம் தொடர்ந்து தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா - காவிரி நதிகளை இணைப்பதுதான் எனது முதல் வேலை” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவுதான் இப்படி கூறினனார் நிதின் கட்கரி. அதாவது தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடைந்ததை அறிவித்த சில மணி நேரத்தில் இந்த கருத்தை வெளியிட்டார் நிதின் கட்கரி.
“என்ன ஒரு அற்புதமான மனிதர் இவர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் வாக்களித்த போதும் தமிழ்நாட்டின் மேம்பாட்டைதான் முதல் திட்டமாக வைத்திருக்கிறார். இந்த கட்சியைத் தான் தமிழ்நாடு அங்கீகரிக்க தவறிவிட்டது” என்று தமிழர்கள் வெட்கி தலைகுனிந்த தினம் அன்று.
மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்றதும், “ஜல் சக்தி” என்ற அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதோடு நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பான பூர்வாங்க வேலைகள் தொடங்கி உள்ளன.
நதிகள் இணைக்க திட்டம் தயாராகிறது, கோதாவரி-கிருஷ்ணா - காவிரி நதிகளை இணையப்போகிறது என்பதை தெரிந்துகொண்ட காங்கிரஸ் தனது நிஜ முகத்தை காட்டியுள்ளது.
ஆமாம், மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து பேசினார்.
அப்போது அவர், “தண்ணீர் பிரச்சினைக்காக ‘ஜல்சக்தி’ அமைச்சகம் உருவாக்கி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் நதிகள் இணைப்பு திட்டம், பேராபத்தை உண்டாக்கி விடும். நதிகள் இணைப்பு திட்டத்தை ஜல்சக்தி அமைச்சகம் கைவிட வேண்டும்.” என்று ஜெய்ராம் ரமேஷ் நஞ்சை கச்கினார்.