“ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பான தாக்குதல்களுக்கு காங்கிரசே பொறுப்பு” - ஜமாத் இ உலமா தலைவர் அறிவிப்பு !!

“ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பான தாக்குதல்களுக்கு காங்கிரசே பொறுப்பு” - ஜமாத் இ உலமா தலைவர் அறிவிப்பு !!

Update: 2019-07-13 10:12 GMT


நாட்டில் பல பகுதிகளில் நடந்துவரும் தாக்குதல் சம்பவங்களுக்கு காங்கிரசே பொறுப்பு என ஜமாத் இ உலமா ஹிந்த் அமைப்பு தலைவர் மவுலானா சாகிப் குவாஸ்மி கூறினார். பாஜகவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.


மாட்டிறைச்சி, மற்றும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் தொடர்பாக நாட்டில் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக செய்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஜமாத் இ உலமா ஹிந்த் அமைப்பு தலைவர் மவுலானா சாகிப் குவாஸ்மி கவுகாத்தியில் நிருபர்களிடம் கூறியதாவது:-


நாட்டில் பல பகுதிகளில் நடந்துவரும் தாக்குதல் சம்பவங்களுக்கு காங்கிரசே பொறுப்பு. பாஜகவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் இதில் தொடர்பு இல்லை.


இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு விசாரித்தால் உண்மை வெளியாகும். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும் இது போன்ற சம்பவம் நடப்பது ஏன்? 


இவ்வாறு அவர் கூறினார்.


Similar News