ரபேல் விவகாரத்தில் பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -ரவிசங்கர் பிரசாத்

ரபேல் விவகாரத்தில் பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -ரவிசங்கர் பிரசாத்

Update: 2019-11-15 08:01 GMT

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை  தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பு வழங்கியது.அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய கோர்ட், முந்தைய தீர்ப்பை உறுதிசெய்தது.சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.



 தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பொய் சொல்லி உள்ளார்.


அவரது குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் அதிபர் மேக்ரான்கூட நிராகரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மோடிதான் ரிலையன்ஸ் குடும்பத்துக்கு தந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து பேசிய அவர் இதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதில் துளி கூட அரசு தலையிட வில்லை என தெரிவித்தார்.


Similar News