சென்னை அரசு மருத்துவருக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை முடக்கம்.!
சென்னை அரசு மருத்துவருக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை முடக்கம்.!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் 1200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு 34 வயது ஆகிறது. அவரை தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இவர் பணிபுரிந்த இதயநோய் சிகிச்சை பிரிவை மூடப்பட்டன. மேலும் மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.